×

ஆள்மாறாட்டம் காரணமாக வக்கீல் வெட்டி கொல்ல முயற்சி: 2 பேர் கைது; 5 பேருக்கு வலை

ஆவடி: ஆவடி அடுத்த பொத்தூர், ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் சத்யநாராயணன் (24). இவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சத்தியநாராயணன், தனது நண்பர்கள் மணிகண்டன், தினேஷ் ஆகியோருடன் அதே பகுதி, வாட்டர் டேங்க் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வந்துள்ளனர். பின்னர், அவர்களில் ஒருவன் சத்தியநாராயணனை கத்தியால் வெட்டியுள்ளார். உடனே மணிகண்டன், தினேஷ் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி சென்றனர். இந்த தாக்குதலில் சத்யநாராயணனுக்கு வலது கையில் படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து  வருகின்றனர். புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், வக்கீல் சத்யநாராயணனை  பொத்தூர், மேட்டு காலனி சேர்ந்த ஆகாஷ் ( 20), செங்குன்றம், காந்தி நகரைச் சேர்ந்த கோகுல் (19) உள்ளிட்ட 7 பேர் வெட்டி கொல்ல முயன்றது தெரியவந்தது. மேலும்,  இவர்கள்  பொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அரி என்பவரை வெட்டிக் கொல்லுவதற்கு பதிலாக ஆள்மாறாட்டம் காரணமாக சத்யநாராயணனை  வெட்டி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ஆகாஷ், கோகுல் இருவரையும் கைது செய்தனர். பின்னர், போலீசார் அவர்கள் இருவரையும் அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post ஆள்மாறாட்டம் காரணமாக வக்கீல் வெட்டி கொல்ல முயற்சி: 2 பேர் கைது; 5 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Awadi ,Satyanarayanan ,Awati ,Pothur, Athavava Street ,Ambantur Court ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்